top of page
hero_image.jpg

"ஆயிரம் கதை சொல்றவன்கிட்ட ஏதாவது கதைசொல்லுன்னு கேட்டா என்ன கதை சொல்லன்னுதான் கேப்பான். ஆயிரம் கதை அவனுக்குத் தெரியும்லா... ஏதாவது ஒரு கதையைச் சொல்லலாம்லா... ஆனா அவனால சொல்ல முடியாது. அவனோட வாழ்க்கையே கதையா இருக்கும்போது எந்தக் கதையைச் சொல்வான்..."  

kira_signature_white.png
decor_01.png

வணக்கம்,  இந்திய மற்றும் தமிழிலக்கியத்தின் மாபெரும் கதை சொல்லியான கி.ராஜநாராயணனின் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம் . இத்தளம், கி.ராவுடைய சிறுகதைகள், கட்டுரைகள், மற்ற படைப்புகள், அவரைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள் எழுதிய ஆய்வுகள், பதிவுகள், ஆவணப்படம், காணொளிகள், புகைப்படங்கள் என அனைத்தும் அடங்கிய ஒரு கருவூலமாக இலக்கிய வாசகர்களுக்குப் பயன்படும் என நம்புகிறோம்.  மண்ணிடமும் மனிதனிடமும் அளவற்ற கரிசனத்துடன் உரையாடும் கி.ராவின் படைப்புலகத்துக்கு இந்தத் தளம் ஒரு நுழைவாயிலாக இருக்கும்.

கி.ராவைப் பற்றி

jm.png

ஜெயமோகன்

கி.ராவின் புனைவுலகம் ஒரு மானுடக்கனவை முன்வைக்கிறது. எந்த நவீனத்துவ எழுத்தாளரிடமும் அத்தகைய கனவு கிடையாது.

அக்கனவால்தான் அவர் மாபெரும் படைப்பாளி.

sra.png

​எஸ்.ராமகிருஷ்ணன்

கடவுள் விடுகின்ற பெருமூச்சைப் போல காற்றுவீசும் கரிசல் வெளி என்று தேவதச்சன் ஒரு கவிதையில் சொல்கிறார்.

அந்த மூச்சுக்காற்றை இசையாக்கியவர் கிரா. தனது படைப்புகளின் வழியே அவர் என்றும் நம்மோடு இருப்பார்.

nanjil.jpg

நாஞ்சில் நாடன்​

இந்த மொழியை இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் அடுத்த நூற்றாண்டை நோக்கி கடத்திக்கொண்டிருக்கும்  
மாபெரும் எழுத்தாளர்களில் 

ஒருவர் கி.ரா

bottom of page